கவிதை

                                           விவசாயி       
காடு கொடுத்தான் கடவுள்
அதை தன் உழைப்பால் வயலாக்கினான் விவசாயி
தானியம் தந்தான் கடவுள்
அதை மண்ணில் விதைதான் விவசாயி
அதற்கு உயிர் கொடுக்க மழை தந்தான் கடவுள்
தன் உயிரை கொடுத்து உழைத்தான் விவசாயி
அதற்கு பலன் கொடுத்தான் கடவுள்
ஆக மொத்தத்தில் கடவுளும் விவசாயும் வேறு , வேறு அல்ல
இருவரும் ஒன்றே
இருவரையும் வணங்குவோம் நாமே                                               அருக்காணி
                             
                               அதி தேவதை
பிறந்த குழந்தைக்கு அம்மா தேவதை 
ஐந்து வயதில் கிளாஸ் டீச்சர் தேவதை
பத்து வயதில் பக்கத்து வீட்டு பெண் தேவதை
பதினைந்து வயதில் பள்ளி தோழி தேவதை
இருவது வயதில் தன்மனம் கவர்ந்த பெண் தேவதை
இருபத்தைந்து வயதில் தன்கரம் பிடித்த மனைவி தேவதை
முப்பது வயதில் தன் பிஞ்சு மகள் தேவதை
எந்த வயதிலும் தன் சுகதுக்கங்களில் பங்கு கொள்ளும் தன் துனணவி தேவதைக்கெல்லாம் தேவதை
தன் அறுபது வயதிலும் தன்னை முகம் சுளிக்காமல் தாய் போல் சேவை செய்யும் மருமகள் ஒரு அதி தேவதை
                                                                                           அருக்காணி

No comments:

Post a Comment