மரம் எனும் தாயை காப்பறினால் தான் மழை என்னும் பிள்ளையை ஆரோகியமாக பெற்று தருவாள்.....!
Sunday, 29 October 2017
Friday, 27 October 2017
Monday, 23 October 2017
ஜோதிடப் பாடம் – 51 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
சூரிய குடும்பம்
சூரிய குடும்பத்தைப் போல பல சூரிய குடும்பங்கள் உள்ளன. நாம் நமது சூரிய குடும்பத்தைப் பற்றிப் பார்ப்போம். சூரியனை மையமாக வைத்து எல்ல கிரகங்களும் சுற்றி வருகின்றன.

இந்த கிரகங்களில் சிலவற்றிற்கு உப கிரகங்கள் உண்டு. அவையாவன :
1. பூமி - சந்திரன்
2. செவ்வாய் - 2 உப கிரகங்கள்
3. குரு - 16 உப கிரகங்கள்
4. சனி - 20-க்கும் மேற்பட்டவை
5. யுரேனஸ் - 15 கிரகங்கள்
6. நெப்டியூன் - 8 கிரகங்கள்
7. புளூட்டோ - 1 கிரகம்
சந்திரனைத் தவிர மற்ற உப கிரகங்களையெல்லாம் நாம் படத்தில் காட்டவில்லை. சூரியன் தன் புவியீர்ப்பு சக்தியினால் எல்லா கிரகங்களையும், உப கிரகங்களையும் தன்னைச் சுற்றி வரும்படி செய்கிறது.
கிரக தூரங்கள்:
சூரியன் நம் பூமியிலிருந்து சுமார் 15, 00, 00, 000 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. இந்த தூரத்தைத்தான் ஒரு Astronomical Unit (AU) என்று அழைக்கிறோம். இதேபோல் புதன், சூரியனில் இருந்து 0.39 AU தூரத்திலும், சுக்கிரன் 0.72 AU தூரத்திலும், செவ்வாய் 1.52 AU தூரத்திலும், குரு 5.2 AU தூரத்திலும், சனி 9.54 AU தூரத்திலும் இருக்கின்றார்கள். நாம் நமது வாசகர்களுக்கு ஒரு சிறிய சந்தேகத்தைத் தீர்க்க இருக்கிறோம். மேலே காட்டியுள்ள படத்தில் சூரியனை மையமாக வைத்து எல்லா கிரகங்களும் சுற்றி வருகின்றன என எழுதி இருக்கின்றோம். ஆனால் நமது பாடங்களில் சூரியன், சித்திரை மாதம் மேஷத்திலும், வைகாசிமாதம் ரிஷபத்திலும், சஞ்சாரம் செய்வதாக எழுதியுள்ளோம். அதாவது ஆண்டு முழுவதும் 12 ராசிகளிலும் சூரியன் சஞ்சாரம் செய்வதாக எழுதி இருக்கின்றோமே! சூரியன் நிலையாக ஓரிடத்தில் இருக்கிறதா? அல்லது அதுவும் மற்ற கிரகங்களைப்போல் சஞ்சாரம் செய்கின்றதா? இதுதான் இப்போதைய சந்தேகம்.
நாம் பூமியில் இருக்கின்றோம். பூமி சுற்றுவது நமக்குத் தெரியவில்லை. இங்கிருந்து பார்க்கும்போது சூரியனும், மற்ற கிரகங்களும் நம்மைச் சுற்றுவதுபோல் தெரிகின்றன. இது ஒரு தோற்றம்தான். இந்தத் தோற்றத்தை நாம் Geo-Centric என்று அழைக்கிறோம். இதன் அடிப்படியில்தான் நமது பஞ்சாங்கங்கள் தயாரிக்கப் படுகின்றன. இதனால்தான் சூரியனும், மற்ற கிரகங்களும் நம்மைச் சுற்றிவதுபோல் பஞ்சாங்கங்களில் கணிக்கப் படுகின்றன. மேலை நாட்டவர்கள் தயாரிக்கும் Ephemeris களிலும் இந்த Geo-Centric முறைதான் பின்பற்றப் படுகிறது.
சூரியனை மையமாக வைத்து மற்ற கிரகங்கள் சுற்றி வருகின்றன அல்லவா? இந்த நிலைக்கு Helio-Centric என்று பெயர். கிரேக்க மொழியில் “Helio” என்றால் சூரியன் எனப் பொருள்.
ராகு - கேதுக்கள்:
இவை சாயாக் கிரகங்கள் அல்லது நிழல் கிரகங்கள். இவைகளுக்கு உருவம் கிடையாது. பூமியைச் சூரியன் சுற்றுவதாகத் தெரிகின்றது அல்லவா? அந்த நீள் வட்டப் பாதைக்கு ஆங்கிலத்தில் Ecliptic எனப் பெயர். அதன் தமிழ்ப் பெயர் நமக்குத் தெரியவில்லை. ஆங்கிலத்திலேயே அழைப்போம். சந்திரன் பூமியைச் சுற்றுகின்றது அல்லவா? இவ்வாறு சுற்றி வரும்போது இந்த Ecliptic என்று கூறப்படுகின்ற சூரியப் பாதையை இரண்டு இடங்களில் சந்திக்கிறார். சந்திக்கும் இந்த இரண்டு புள்ளிகள்தான் ராகு, கேதுக்கள். இதை நாம் படத்தில் போட்டுக் காட்டியுள்ளோம். இப்படம் ராகு, கேதுக்களைப் பற்றிய எண்ணங்களைத் தெளிவாக்கும் என எண்ணுகிறோம்.

சந்திரன் தன் பாதையில் முன்னேற முன்னேற ராகு, கேதுக்கள் பின் நோக்கிச் செல்கின்றன. ராகு, கேதுக்களுக்கு இடையில் உள்ள தூரம் எப்போதுமே 180 பாகைகள்.
இவை ஒரு ராசியைக் கடக்க சுமார் ஒண்ணறை ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இவைகளின் வேகம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, வேறுபடுகின்றன. முதலில் இவைகளின் நிலையைத் தோராயமாகக் கணிக்கிறார்கள். இந்த நிலைக்கு ஆங்கிலத்தில் “Mean Position” என்று பெயர். இவ்வாறு அவைகளின் நிலையை ஓரளவு கணித்தபின் அவைகளைத் திருத்தம் செய்கிறார்கள். இவ்வாறு திருத்தப் பட்டதற்கு “True Position” என்று பெயர். இந்த “True Position” தான் ஜோதிடத்திற்குத் தேவை. அந்த நிலையைத் தான் ஜோதிடர்கள் உபயோகப் படுத்த வேண்டும்.
சூரிய குடும்பத்தைப் போல பல சூரிய குடும்பங்கள் உள்ளன. நாம் நமது சூரிய குடும்பத்தைப் பற்றிப் பார்ப்போம். சூரியனை மையமாக வைத்து எல்ல கிரகங்களும் சுற்றி வருகின்றன.
இந்த கிரகங்களில் சிலவற்றிற்கு உப கிரகங்கள் உண்டு. அவையாவன :
1. பூமி - சந்திரன்
2. செவ்வாய் - 2 உப கிரகங்கள்
3. குரு - 16 உப கிரகங்கள்
4. சனி - 20-க்கும் மேற்பட்டவை
5. யுரேனஸ் - 15 கிரகங்கள்
6. நெப்டியூன் - 8 கிரகங்கள்
7. புளூட்டோ - 1 கிரகம்
சந்திரனைத் தவிர மற்ற உப கிரகங்களையெல்லாம் நாம் படத்தில் காட்டவில்லை. சூரியன் தன் புவியீர்ப்பு சக்தியினால் எல்லா கிரகங்களையும், உப கிரகங்களையும் தன்னைச் சுற்றி வரும்படி செய்கிறது.
கிரக தூரங்கள்:
சூரியன் நம் பூமியிலிருந்து சுமார் 15, 00, 00, 000 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. இந்த தூரத்தைத்தான் ஒரு Astronomical Unit (AU) என்று அழைக்கிறோம். இதேபோல் புதன், சூரியனில் இருந்து 0.39 AU தூரத்திலும், சுக்கிரன் 0.72 AU தூரத்திலும், செவ்வாய் 1.52 AU தூரத்திலும், குரு 5.2 AU தூரத்திலும், சனி 9.54 AU தூரத்திலும் இருக்கின்றார்கள். நாம் நமது வாசகர்களுக்கு ஒரு சிறிய சந்தேகத்தைத் தீர்க்க இருக்கிறோம். மேலே காட்டியுள்ள படத்தில் சூரியனை மையமாக வைத்து எல்லா கிரகங்களும் சுற்றி வருகின்றன என எழுதி இருக்கின்றோம். ஆனால் நமது பாடங்களில் சூரியன், சித்திரை மாதம் மேஷத்திலும், வைகாசிமாதம் ரிஷபத்திலும், சஞ்சாரம் செய்வதாக எழுதியுள்ளோம். அதாவது ஆண்டு முழுவதும் 12 ராசிகளிலும் சூரியன் சஞ்சாரம் செய்வதாக எழுதி இருக்கின்றோமே! சூரியன் நிலையாக ஓரிடத்தில் இருக்கிறதா? அல்லது அதுவும் மற்ற கிரகங்களைப்போல் சஞ்சாரம் செய்கின்றதா? இதுதான் இப்போதைய சந்தேகம்.
நாம் பூமியில் இருக்கின்றோம். பூமி சுற்றுவது நமக்குத் தெரியவில்லை. இங்கிருந்து பார்க்கும்போது சூரியனும், மற்ற கிரகங்களும் நம்மைச் சுற்றுவதுபோல் தெரிகின்றன. இது ஒரு தோற்றம்தான். இந்தத் தோற்றத்தை நாம் Geo-Centric என்று அழைக்கிறோம். இதன் அடிப்படியில்தான் நமது பஞ்சாங்கங்கள் தயாரிக்கப் படுகின்றன. இதனால்தான் சூரியனும், மற்ற கிரகங்களும் நம்மைச் சுற்றிவதுபோல் பஞ்சாங்கங்களில் கணிக்கப் படுகின்றன. மேலை நாட்டவர்கள் தயாரிக்கும் Ephemeris களிலும் இந்த Geo-Centric முறைதான் பின்பற்றப் படுகிறது.
சூரியனை மையமாக வைத்து மற்ற கிரகங்கள் சுற்றி வருகின்றன அல்லவா? இந்த நிலைக்கு Helio-Centric என்று பெயர். கிரேக்க மொழியில் “Helio” என்றால் சூரியன் எனப் பொருள்.
ராகு - கேதுக்கள்:
இவை சாயாக் கிரகங்கள் அல்லது நிழல் கிரகங்கள். இவைகளுக்கு உருவம் கிடையாது. பூமியைச் சூரியன் சுற்றுவதாகத் தெரிகின்றது அல்லவா? அந்த நீள் வட்டப் பாதைக்கு ஆங்கிலத்தில் Ecliptic எனப் பெயர். அதன் தமிழ்ப் பெயர் நமக்குத் தெரியவில்லை. ஆங்கிலத்திலேயே அழைப்போம். சந்திரன் பூமியைச் சுற்றுகின்றது அல்லவா? இவ்வாறு சுற்றி வரும்போது இந்த Ecliptic என்று கூறப்படுகின்ற சூரியப் பாதையை இரண்டு இடங்களில் சந்திக்கிறார். சந்திக்கும் இந்த இரண்டு புள்ளிகள்தான் ராகு, கேதுக்கள். இதை நாம் படத்தில் போட்டுக் காட்டியுள்ளோம். இப்படம் ராகு, கேதுக்களைப் பற்றிய எண்ணங்களைத் தெளிவாக்கும் என எண்ணுகிறோம்.
சந்திரன் தன் பாதையில் முன்னேற முன்னேற ராகு, கேதுக்கள் பின் நோக்கிச் செல்கின்றன. ராகு, கேதுக்களுக்கு இடையில் உள்ள தூரம் எப்போதுமே 180 பாகைகள்.
இவை ஒரு ராசியைக் கடக்க சுமார் ஒண்ணறை ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இவைகளின் வேகம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, வேறுபடுகின்றன. முதலில் இவைகளின் நிலையைத் தோராயமாகக் கணிக்கிறார்கள். இந்த நிலைக்கு ஆங்கிலத்தில் “Mean Position” என்று பெயர். இவ்வாறு அவைகளின் நிலையை ஓரளவு கணித்தபின் அவைகளைத் திருத்தம் செய்கிறார்கள். இவ்வாறு திருத்தப் பட்டதற்கு “True Position” என்று பெயர். இந்த “True Position” தான் ஜோதிடத்திற்குத் தேவை. அந்த நிலையைத் தான் ஜோதிடர்கள் உபயோகப் படுத்த வேண்டும்.
ஜோதிடப் பாடம் – 52 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
Celestial Sphere (ஆகாயக் கோளம்):
நாம் பகலில் ஆகாயத்தைப் பார்த்தால் எப்படி இருக்கிறது? ஒரு பாதிக் கோளத்தை பூமியின் மேல் கவிழ்த்து வைத்ததுபோல் இருக்கிறது. இரவில் பார்த்தால் இருட்டாக மற்றொறு கோளத்தைக் கவிழ்த்து வைத்ததுபோல் இருக்கிறது. இந்த அரைக் கோளத்திற்குள் சந்திரன், மற்றும் கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகியவை இருக்கின்றன. இந்த இரு அரைக் கோளத்தையும் சேர்த்தால் ஒரு முழு வட்டம், பூமிக்குமேல் இருப்பதுபோல் தெரிகிறது. இந்தக் கோளமானது ஒரு கற்பனைதான். உண்மையில் இல்லை. இந்தக் கற்பனைக் கோளத்திற்குள்தான், நாம் கிரகங்கள் சுற்றுவதையும், அவைகளின் வேகத்தையும் கணக்கிட வேண்டும். பகலில் சூரியன், பூமியைச் சுற்றுவது போலவும், இரவில் சந்திரன் மற்றும் பிற கிரகங்கள் சுற்றுவது போலவும்தோற்றமளிக்கின்றன. நாம் பூமியில் இருப்பதால், இங்கிருந்து அவை எப்படி, எவ்வாறு சுற்றுகின்றன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். நமக்குமேல் தெரியும் இந்தக் கோளத்திற்கு Celestial Sphere - "ஆகாயக் கோளம்" எனப் பெயர். இந்தக் கோளத்திற்குள் பல நட்சத்திரங்கள் கூட்டம் கூட்டமாக உள்ளன. ஒவ்வொரு நட்சத்திரக் கூட்டத்திற்கும் ஒரு உருவ அமைப்பு உண்டு. இந்த நட்சத்திரக் கூட்டங்களுக்கு "Constellations" எனப் பெயர். ஒவ்வொரு நட்சத்திரக் கூட்டமும் ஒரு உருவ அமைப்பை உடையது எனக் கூறி இருந்தோம். பூமியிலிருந்து பார்க்கும்போது ஒரு உருவ அமைப்பைக் காட்டுகிறது. ஆனால் இந்த நட்சத்திரங்களெல்லாம் பூமியிலிருந்து சம தூரத்தில் இல்லை. ஒவ்வொன்றும் வெவ்வேறு தூரத்தில் இருக்கிறது. ஆனால் பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லாமே சமதூரத்தில் இருப்பது போன்ற தோற்றத்தை அளிக்கிறது. எல்லாமே தோற்றம்தான், உண்மையல்ல!
பூமி தன்னைத் தானே சுற்றுவது நமக்குத் தெரியாததால் இந்த ஆகாயக் கோளம் தினமும் ஒருமுறை நம்மைச் சுற்றுவதைப் போன்ற தோற்றத்தை நமக்கு அளிக்கிறது. இந்த ஆகாயக் கோளத்தினுடைய "ஆகாய பூமத்திய ரேகை" (Celestial Equator), பூமியினுடைய பூமத்திய ரேகைக்கு நேராக இருக்கிறது. அதே போன்று ஆகாய வட துருவம் (Celestial North Pole), ஆகாய தென் துருவம் (Celestial South Pole), ஆகியவை பூமியின் வட துருவம், தென் துருவம் ஆகியவற்றிற்கு நேர் எதிராக இருக்கின்றன.
பூமியில் ஒரு இடத்தைக் குறிக்க அல்லது ஒரு ஊரைக் குறிக்க அட்ச ரேகை (Latitude), மற்றும் தீர்க்க ரேகை (Longtitude), தேவையல்லவா?
Latitude-க்கு ஆகாயக் கோளத்தில் "Declination" எனப் பெயர். Longtitude-க்கு ஆகாயக் கோளத்தில் "Right Ascension" எனப் பெயர். இவைகளைச் சுறுக்கமாக ‘Dec’ என்ரும் ‘RA’ என்றும் அழைப்பார்கள். பூமியில் ஒர் இடத்தைக் குறிக்க வட துருவம், மற்றும் தென் துருவம் இவற்றை இணைக்கும் பிரதான ரேகையிலிருந்து, அந்த இடம் எவ்வளவு தீர்க்க ரேகையில் (Longtitude) இருக்கிறது எனப் பார்ப்பார்கள். அந்தப் பிரதான ரேகையானது லண்டன் வழியாகச் செல்லும் ரேகையை 1884-ல் உலக நாடுகள் தேர்ந்தெடுத்துள்ளன. அந்த இடம் பிரதான ரேகையிலிருந்து கிழக்கு அல்லது மேற்காக பிரதான ரேகையிலிருந்து எவ்வளவு தூரத்திலிருக்கிறது எனக் கூறுவார்கள். உதாரணமாக சென்னையின் தீர்க்க ரேகை 80017’ (East) என்றால் சென்னையானது லண்டன் வழியாகச் செல்லும் பிரதான ரேகையிலிருந்து கிழக்கே 80-Degrees, 17-Minutes தூரத்தில் இருக்கிறது எனப் பொருள்.
ஆனால் RA என்பது ஆகாய மண்டலத்தின் ஆரம்ப இடமான மேஷத்தி லிருந்து ஓர் இடம் எவ்வளவு தூரம் கிழக்குப் பக்கமாக இருக்கிறது எனக் கூறுகிறது. மேற்குப் பக்கம் பார்ப்பது இல்லை. தீர்க்க ரேகையைக் கூறுவது போல் Degree, Minutes, Seconds - ல் இதைக் கூறுவது இல்லை. மணி, நிமிடம், வினாடியில் தான் கூறுவார்கள். ஆகவே ஓர் இடம் கிழக்குப் பக்கமாக அதிகப் படியாக 24-மணி நேரம்தான் இருக்க முடியும்.
ஆனால் Latitude என்று சொல்லுகின்ற அட்ச ரேகைக்கும், ஆகாயக் கோளத்தில் குறிக்கப்படுகின்ற Declination என்கிற ஆகாய அட்சரேகைக்கும் அதிக வித்தியாசமில்லை. இரண்டும் பாகை, கலை, விகலையில்தான் கூறிப்பிடப் படுகிறது.
International Date Line:

நமது பூமியின்மேல் ஒரு மானசீகக் கோடு உள்ளது. அது என்ன தெரியுமா? அதுதான் சர்வதேச தேதி மாறும் கோடு (International Date Line). இந்தக் கோட்டைத் தாண்டும்போது ஒரு நாள் மாறுபடுகிறது. ஆகாய விமானத்தின் மூலமாகவோ அல்லது கப்பல் மூலமாகவோ இந்தக் கோட்டைத் தாண்டும்போது ஒரு நாள் மாறுபடுகிறது. இந்தக் கோடு எங்கு இருக்கிறது தெரியுமா? பசுபிக் மஹாக் கடலில் இருக்கிறது. பிரதான அட்சரேகை லண்டன் வழியாகச் செல்கிறதே, அங்கிருந்து சரியாக 180 வது டிகிரியில் இந்தக் கோடு அமைந்துள்ளது. சைபீரியா, பிஜித் தீவுகள், மற்றும் நியூசிலாந்து ஆகியவற்றிற்கு கிழக்குப் பக்கமாகவும், வட அமெரிக்காவிலுள்ள அலாஸ்காவிற்கு மேற்குப் பக்கத்திலும் இக்கோடு வரையப் பட்டுள்ளது. இது எந்த நாட்டுத் தரைவழியாகவும் செல்லாமல் கடல் மேலேயே மானசீகமாக வரையப் பட்டுள்ளது. இக்கோடு நேராக இல்லாமல் வளைந்து, வளைந்து உள்ளது. ஏன் தெரியுமா?
இது எந்த நாட்டின் வழியாகவும் செல்லக் கூடாது என்கின்ற காரணத்தினால், கடலிலேயே செல்ல வேண்டும் என்ற நோக்குடன் வரையப் பட்டு இருப்பதால் நேர்கோடாக இல்லாமல் வளைந்து, வளைந்து இருக்கிறது.
Prime Meridian என்று சொல்லப்படுகிற பிரதான அட்சரேகையிலிருந்து கிழக்கே செல்லச் செல்ல நேரம் எவ்வாறு மாறுபடுகிறது என்பதை மெலே உள்ள படம் விளக்கி இருக்கிறது பாருங்கள். ஒவ்வொரு நாட்டிற்கும் நேரம் எவ்வாறு மாறுபடுகிறது என்பதையும் இப்படம் விளக்கி இருக்கிறது பாருங்கள். பிஜித்தீவுகள், மற்றும் நியூசிலாந்தில் திங்கள் கிழமை என்றால் அலாஸ்காவிற்கு ஞாயிற்றுக் கிழமை. ஒருநாள் வித்தியாசப் படுகிறது. இப்போது நேரம் எவ்வாறு மாறுபடுகிறது என நமது வாசகர்களுக்குப் புரிந்து இருக்குமென எண்ணுகிறோம்.
இவைகளெல்லாம் ஜோதிடம் பார்ப்பதற்குத் தேவையா? என்று கேட்டால் நாம் "ஆம்" என்றுதான் பதில் சொல்லுவோம். ஜோதிடர்களுக்கு அடிப்படையான வானவியல் தெரிந்திருக்க வேண்டுமென்பது நம் கருத்து. அதற்காகவே எழுதப்பட்ட பாடமிது.
நாம் பகலில் ஆகாயத்தைப் பார்த்தால் எப்படி இருக்கிறது? ஒரு பாதிக் கோளத்தை பூமியின் மேல் கவிழ்த்து வைத்ததுபோல் இருக்கிறது. இரவில் பார்த்தால் இருட்டாக மற்றொறு கோளத்தைக் கவிழ்த்து வைத்ததுபோல் இருக்கிறது. இந்த அரைக் கோளத்திற்குள் சந்திரன், மற்றும் கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகியவை இருக்கின்றன. இந்த இரு அரைக் கோளத்தையும் சேர்த்தால் ஒரு முழு வட்டம், பூமிக்குமேல் இருப்பதுபோல் தெரிகிறது. இந்தக் கோளமானது ஒரு கற்பனைதான். உண்மையில் இல்லை. இந்தக் கற்பனைக் கோளத்திற்குள்தான், நாம் கிரகங்கள் சுற்றுவதையும், அவைகளின் வேகத்தையும் கணக்கிட வேண்டும். பகலில் சூரியன், பூமியைச் சுற்றுவது போலவும், இரவில் சந்திரன் மற்றும் பிற கிரகங்கள் சுற்றுவது போலவும்தோற்றமளிக்கின்றன. நாம் பூமியில் இருப்பதால், இங்கிருந்து அவை எப்படி, எவ்வாறு சுற்றுகின்றன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். நமக்குமேல் தெரியும் இந்தக் கோளத்திற்கு Celestial Sphere - "ஆகாயக் கோளம்" எனப் பெயர். இந்தக் கோளத்திற்குள் பல நட்சத்திரங்கள் கூட்டம் கூட்டமாக உள்ளன. ஒவ்வொரு நட்சத்திரக் கூட்டத்திற்கும் ஒரு உருவ அமைப்பு உண்டு. இந்த நட்சத்திரக் கூட்டங்களுக்கு "Constellations" எனப் பெயர். ஒவ்வொரு நட்சத்திரக் கூட்டமும் ஒரு உருவ அமைப்பை உடையது எனக் கூறி இருந்தோம். பூமியிலிருந்து பார்க்கும்போது ஒரு உருவ அமைப்பைக் காட்டுகிறது. ஆனால் இந்த நட்சத்திரங்களெல்லாம் பூமியிலிருந்து சம தூரத்தில் இல்லை. ஒவ்வொன்றும் வெவ்வேறு தூரத்தில் இருக்கிறது. ஆனால் பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லாமே சமதூரத்தில் இருப்பது போன்ற தோற்றத்தை அளிக்கிறது. எல்லாமே தோற்றம்தான், உண்மையல்ல!
பூமி தன்னைத் தானே சுற்றுவது நமக்குத் தெரியாததால் இந்த ஆகாயக் கோளம் தினமும் ஒருமுறை நம்மைச் சுற்றுவதைப் போன்ற தோற்றத்தை நமக்கு அளிக்கிறது. இந்த ஆகாயக் கோளத்தினுடைய "ஆகாய பூமத்திய ரேகை" (Celestial Equator), பூமியினுடைய பூமத்திய ரேகைக்கு நேராக இருக்கிறது. அதே போன்று ஆகாய வட துருவம் (Celestial North Pole), ஆகாய தென் துருவம் (Celestial South Pole), ஆகியவை பூமியின் வட துருவம், தென் துருவம் ஆகியவற்றிற்கு நேர் எதிராக இருக்கின்றன.
பூமியில் ஒரு இடத்தைக் குறிக்க அல்லது ஒரு ஊரைக் குறிக்க அட்ச ரேகை (Latitude), மற்றும் தீர்க்க ரேகை (Longtitude), தேவையல்லவா?
Latitude-க்கு ஆகாயக் கோளத்தில் "Declination" எனப் பெயர். Longtitude-க்கு ஆகாயக் கோளத்தில் "Right Ascension" எனப் பெயர். இவைகளைச் சுறுக்கமாக ‘Dec’ என்ரும் ‘RA’ என்றும் அழைப்பார்கள். பூமியில் ஒர் இடத்தைக் குறிக்க வட துருவம், மற்றும் தென் துருவம் இவற்றை இணைக்கும் பிரதான ரேகையிலிருந்து, அந்த இடம் எவ்வளவு தீர்க்க ரேகையில் (Longtitude) இருக்கிறது எனப் பார்ப்பார்கள். அந்தப் பிரதான ரேகையானது லண்டன் வழியாகச் செல்லும் ரேகையை 1884-ல் உலக நாடுகள் தேர்ந்தெடுத்துள்ளன. அந்த இடம் பிரதான ரேகையிலிருந்து கிழக்கு அல்லது மேற்காக பிரதான ரேகையிலிருந்து எவ்வளவு தூரத்திலிருக்கிறது எனக் கூறுவார்கள். உதாரணமாக சென்னையின் தீர்க்க ரேகை 80017’ (East) என்றால் சென்னையானது லண்டன் வழியாகச் செல்லும் பிரதான ரேகையிலிருந்து கிழக்கே 80-Degrees, 17-Minutes தூரத்தில் இருக்கிறது எனப் பொருள்.
ஆனால் RA என்பது ஆகாய மண்டலத்தின் ஆரம்ப இடமான மேஷத்தி லிருந்து ஓர் இடம் எவ்வளவு தூரம் கிழக்குப் பக்கமாக இருக்கிறது எனக் கூறுகிறது. மேற்குப் பக்கம் பார்ப்பது இல்லை. தீர்க்க ரேகையைக் கூறுவது போல் Degree, Minutes, Seconds - ல் இதைக் கூறுவது இல்லை. மணி, நிமிடம், வினாடியில் தான் கூறுவார்கள். ஆகவே ஓர் இடம் கிழக்குப் பக்கமாக அதிகப் படியாக 24-மணி நேரம்தான் இருக்க முடியும்.
ஆனால் Latitude என்று சொல்லுகின்ற அட்ச ரேகைக்கும், ஆகாயக் கோளத்தில் குறிக்கப்படுகின்ற Declination என்கிற ஆகாய அட்சரேகைக்கும் அதிக வித்தியாசமில்லை. இரண்டும் பாகை, கலை, விகலையில்தான் கூறிப்பிடப் படுகிறது.
International Date Line:
நமது பூமியின்மேல் ஒரு மானசீகக் கோடு உள்ளது. அது என்ன தெரியுமா? அதுதான் சர்வதேச தேதி மாறும் கோடு (International Date Line). இந்தக் கோட்டைத் தாண்டும்போது ஒரு நாள் மாறுபடுகிறது. ஆகாய விமானத்தின் மூலமாகவோ அல்லது கப்பல் மூலமாகவோ இந்தக் கோட்டைத் தாண்டும்போது ஒரு நாள் மாறுபடுகிறது. இந்தக் கோடு எங்கு இருக்கிறது தெரியுமா? பசுபிக் மஹாக் கடலில் இருக்கிறது. பிரதான அட்சரேகை லண்டன் வழியாகச் செல்கிறதே, அங்கிருந்து சரியாக 180 வது டிகிரியில் இந்தக் கோடு அமைந்துள்ளது. சைபீரியா, பிஜித் தீவுகள், மற்றும் நியூசிலாந்து ஆகியவற்றிற்கு கிழக்குப் பக்கமாகவும், வட அமெரிக்காவிலுள்ள அலாஸ்காவிற்கு மேற்குப் பக்கத்திலும் இக்கோடு வரையப் பட்டுள்ளது. இது எந்த நாட்டுத் தரைவழியாகவும் செல்லாமல் கடல் மேலேயே மானசீகமாக வரையப் பட்டுள்ளது. இக்கோடு நேராக இல்லாமல் வளைந்து, வளைந்து உள்ளது. ஏன் தெரியுமா?
இது எந்த நாட்டின் வழியாகவும் செல்லக் கூடாது என்கின்ற காரணத்தினால், கடலிலேயே செல்ல வேண்டும் என்ற நோக்குடன் வரையப் பட்டு இருப்பதால் நேர்கோடாக இல்லாமல் வளைந்து, வளைந்து இருக்கிறது.
Prime Meridian என்று சொல்லப்படுகிற பிரதான அட்சரேகையிலிருந்து கிழக்கே செல்லச் செல்ல நேரம் எவ்வாறு மாறுபடுகிறது என்பதை மெலே உள்ள படம் விளக்கி இருக்கிறது பாருங்கள். ஒவ்வொரு நாட்டிற்கும் நேரம் எவ்வாறு மாறுபடுகிறது என்பதையும் இப்படம் விளக்கி இருக்கிறது பாருங்கள். பிஜித்தீவுகள், மற்றும் நியூசிலாந்தில் திங்கள் கிழமை என்றால் அலாஸ்காவிற்கு ஞாயிற்றுக் கிழமை. ஒருநாள் வித்தியாசப் படுகிறது. இப்போது நேரம் எவ்வாறு மாறுபடுகிறது என நமது வாசகர்களுக்குப் புரிந்து இருக்குமென எண்ணுகிறோம்.
இவைகளெல்லாம் ஜோதிடம் பார்ப்பதற்குத் தேவையா? என்று கேட்டால் நாம் "ஆம்" என்றுதான் பதில் சொல்லுவோம். ஜோதிடர்களுக்கு அடிப்படையான வானவியல் தெரிந்திருக்க வேண்டுமென்பது நம் கருத்து. அதற்காகவே எழுதப்பட்ட பாடமிது.
ஜோதிடப் பாடம் – 53 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
இராசி மண்டலம்:
இதை நாம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இவற்றை எல்லாம் பாட ஆரம்பத்திலேயே எழுதி இருக்கலாமே! ஏன் கடைசியில் எழுதுகிறீர்கள்? என நீங்கள் கேட்க்கலாம். ஆரம்பத்தில் ஜோதிடத்தைப் பற்றி வாசகர்களுக்கு ஒன்றும் தெரியாது. அப்போது வானவியலைப் பற்றியெல்லாம் எழுதினால் இது மிகவும் கஷ்டமானதொன்றாக இருக்கும்போல் இருக்கிறதே என்ற தவறான எண்ணம் உண்டாகும். அதனால் அவர்கள் இதைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் தடைப்படும். ஆகவே பாட முடிவில் இதையெல்லாம் எழுதுகிறோம். சூரியனும், மற்ற கிரகங்களும், பூமியிலிருந்து பார்க்கும்போது. அதைச் சுற்றிவருவதுபோல் தோற்றமளிக்கிறது என்று எழுதினோமல்லவா ?

சூரியன், பூமியைச் சுற்றி வருகின்ற பாதை நீள் வட்ட வடிவமானது. இதைத்தான் நாம் ஆங்கிலத்தில் "Ecliptic" என எழுதி இருந்தோம். இந்தப் பாதைக்கு இருபுறமும் (வடக்காகவும், தெற்காகவும்) எட்டு பாகை அளவிற்குப் பாதை அமையுங்கள். அதாவது சூரிய பாதைக்கு வடக்கே எட்டு டிகிரி அளவிலும், தெற்கே எட்டு டிகிரி அளவிலும் நீள் வட்டப் பாதை அமையுங்கள். இதுதான் ராசிமண்டலம். இந்த ராசி மண்டலத்தில்தான் எல்லா கிரகங்களும் சுற்றி வருகின்றன. இந்த ராசி மண்டலம்தான் மேஷம் முதல் மீனம் வரை 12 சம பாகங்களாக, 12 வீடுகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. இதில்தான் எல்லா கிரகங்களும் வலம் வருகின்றன. இந்த ராசி மண்டலம் நீள்வட்ட வடிவில் இருக்கிறது அல்லவா. ஆக மொத்தம் 3600 இருக்கிறது. அப்படியானால் ஒவ்வொரு ராசியும் 300. பன்னிரண்டு ராசியும் 30 x 12 = 360 பாகைகள். இந்த ஆகாய மண்டலத்தில் பூமி மையத்தில் இருக்கிறது அல்லவா? ஆக பூமியும் மானசீகமாக 12 பகுதியாக அல்லது 12 ராசியாகப் பிரிந்து இருக்கிறது. இதைப் பக்கத்தில் உள்ள படத்தைப் பார்த்தால் நன்றாக விளங்கும். கணிதம் தெரிந்தவர்களுக்கு இந்த உண்மை மிக எளிதாகப் புரியும்.

நாம் ஜாதகம் போடக் கற்றுக் கொடுக்கும்போது பூமி 12 ராசியாகப் பிரிக்கப் பட்டு இருக்கிறது என்று பொதுப்படையாக எழுதி விட்டோம். எவ்வாறு பிரிக்கப்பட்டு இருக்கிறது என்று மேலே கூறியதுபோல் விரிவாக எழுதவில்லை. அப்போது வாசகர்கள் ஆரம்ப நிலயில் உள்ளவர்கள். இப்போது அப்படியல்ல; இவற்றையெல்லாம் புரிந்து கொள்ளூம் ஆற்றல் உள்ளவர்கள். ராசி மண்டலமென்றால் என்னவென்றும், பூமி எவ்வாறு 12 ராசிகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது என்றும் வாசகர்கள் நன்றாகப் புரிந்து கொண்டு இருப்பார்கள் என நினைக்கிறோம்.
வக்ர கதி:
இந்த ராசி மண்டலத்தில் கிரகங்கள் சமயங்களில் வக்கிரமாகிறது அல்லவா? அது எவ்வாறு ஆகிறது? வக்கிரம் என்றால் என்ன? எப்படி ஏற்படுகிறது? எனப் பார்ப்போம். "வக்கிரம்" என்றால் பின்னோக்கிச் செல்லுதல் எனப் பொருள். ஆனால் கிரகங்கள் எதுவும் பின்னேக்கிச் செல்வது கிடையாது. அதைப் போன்ற தோற்றம் ஏற்படுகிறது. அது எவ்வாறு ஏற்படுகிறது? எனப் பார்ப்போம். சூரியன், சந்திரன் இரண்டுக்கும் எப்போதுமே வக்கிரகதி என்பது கிடையாது. ராகு, கேதுக்கள் எப்போதுமே வக்கிரகதியிலேயே இருப்பவர்கள் என மேலே பார்த்தோம். அப்படியானால் மற்ற 5 கிரகங்களான புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி ஆகியவற்றிற்கு வக்கிர கதி உண்டா என்றால் நிச்சயம் உண்டு. இப்போது சூரிய மண்டலத்தைக் கண்முன்னே நிறுத்துங்கள். சூரியன் நடுவில் இருக்கிறார். அவரைமுதலில் சுற்றும் கிரகம் புதன். அவருடைய வட்டப் பாதை மிகச் சிறியதாக இருக்கும். இதற்கு அடுத்து சுற்றுபவர் சுக்கிரன். இவர் சுற்றும் பாதையையும் சிறியதுதான். ஆனால் புதனின் பாதையை விடப் பெரியது. அடுத்த சுற்றில் தான் நமது பூமி இருக்கிறது. இவர்கள் இரண்டு பேரின் வட்டப் பாதையைவிட பூமியின் வட்டப் பாதை பெரியது. புதனுக்கும், சுக்கிரனுக்கும் சுற்றும்பாதை சிறியதாக இருப்பதனால் அவைகள் "Inferior Planets" என்றழைக்கப் படுகின்றன. பூமிக்கு அடுத்து வரும் செவ்வாய், குரு, சனி ஆகியவகளின் சுற்றுப்பாதை பூமியின் பாதையைவிட மிகப் பெரியது. ஆகவே அவைகளை "Superior Planets" என்றழைக்கிறார்கள். நாம் முதலில் புதன் இப்படி வக்கிரகதியில் இருப்பதாகத் தோற்றம் அளிக்கிறது எனப் பார்ப்போம். புதன், சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் வரும்போது இவ்விதமாகத் தோற்றம் அளிக்கிறது. அடுத்த பக்கம் உள்ள படத்தைப் பாருங்கள்.

‘பு-1’ என்பது புதனின் நிலை. அந்த இடத்தில் இருக்கும்போது "A" என்ற இடத்தில்துலாத்தில் இருப்பதுபோல் காட்சியளிக்கிறார். ‘பு-2’ என்ற இடத்திற்கு வரும்போது விருச்சிகத்தில் "B" என்ற இடத்தில் இருக்கிறார். ‘பு-3’ என்ற இடத்திற்கு வரும்போது தனுசுவில் "C" என்ற இடத்தில் இருப்பதுபோல் தோற்றமளிக்கிறார். ‘பு-4’, ‘பு-5’ என்ற இடங்களில் இருக்கும்போது மகரத்தில் "D", "E" என்ற இடங்களில் இருப்பதுபோல் தோற்றமளிக்கிறார். "பு-6" என்ற இடத்திற்கு வரும்போதுதான் வக்கிரம் ஆரம்பமாகிறது. அப்போதும் மகரத்தில்தான் இருக்கிறார் "F" என்ற இடத்திலிருந்து. ஆனால் "F" என்ற இடம் மகரத்திலேயே "E" என்ற இடத்திலிருந்து பின்னால் இருக்கிற்து பாருங்கள். "பு-7" என்ற இடம் தனுசில் "G" என்ற இடத்தில் இருக்கிறது பருங்கள். இப்போது புதனானவர் மகரத்திலிருந்து, தனுசிற்கு வந்து விட்டாரா? பின்னோக்கி வந்து விட்டாரா? "பு-8" என்ற இடம் புதன் விருச்சிகத்திற்கு வந்து விட்டதைப்போல் தோற்றத்தைக் கொடுக்கிறது. ஆக புதனின் சிறிய சுற்றுப்பாதை புதன், பூமிக்கும், சூரியனுக்கும் நடுவில் வரும்போது பின்னோக்கி வருவதைப் போல் தோற்றத்தைக் கொடுக்கிறது.இப்போது வக்கிரகதி என்றால் என்னவென்று விளங்கிவிட்டதா? புதன் சூரியனை விட்டு ஒருராசிக்குமேல் தாண்டிப்போகமாட்டார். அதேபோல் ஒரு ராசிக்குமேல் பின்னால் செல்லவும் மாட்டார். சுக்கிரனின் வக்கிர கதியும் இவ்வாறே. சுக்கிரன், சூரியனை விட்டு 2 ராசிக்கு மேல் முன்னாலோ அல்லது பின்னாலோ போக மாட்டார்.
Superior Planets என்று சொல்லப் படுகிற செவ்வாய், குரு, சனி ஆகியவைகள் எப்படி வக்கிரகதியை அடைகின்றன தெரியுமா? இவைகளின் சுற்றும்பாதை பூமி சுற்றும் பாதையை விட மிகப் பெரியது அல்லவா? இந்த கிரகங்களுக்கும், சூரியனுக்கும் நடுவில் பூமி வரும் போது அக்கிரகங்கள், புதனைப்போல் வக்கிரமாக வருவதைப் போல் தோற்றத்தைக் கொடுக்கின்றன. புதனின் வக்கிரகதியை நன்றாகப் புரிந்து கொண்டீர்களேயானால், இந்த கிரகங்களின் வக்கிரகதியும் நன்றாகப் புரியும். ஒவ்வொரு கிரகமும் எவ்வளவு நாட்கள் வக்கிரகதியை அடைகின்றன என்பதைக் கீழே காணலாம். புதன் 24 நாட்கள் வக்கிரமாகவும், சுக்கிரன் 42 நாட்கள் வக்கிரமாகவும், செவ்வாய் 80 நாட்கள் வக்கிரமாகவும், குரு 120 நாட்கள் வக்கிரமாகவும், சனி 140 நாட்கள் வக்கிரமாகவும் இருப்பார்கள். சூரியனுக்கும் சந்திரனுக்கும் வக்கிரகதி கிடையாது என எழுதி இருந்தோம். ஏன் ? என்ற கேள்விக்கும் பதில் சொன்னால் இன்னும் விளக்கமாக இருக்குமல்லவா? சூரியன் நிலையாய் ஓரிடத்திலேயே இருப்பதனால் பூமி மட்டுமே சூரியனைச் சுற்றி வருகிறது.பூமியிலிருந்து எங்கிருந்து பார்த்தாலும் சூரியன் முன்னோக்கிச் செல்வது போலவே தோற்றம் அளிக்கிறது. ஆகவே சூரியனுக்கு வக்கிரகதி என்பதே கிடையாது. சந்திரன் பூமியின் பாதையிலேயே பூமியை¨யும் சுற்றிக்கொண்டு, சூரியனையும் சுற்றிக் கொண்டு வருவதால் அது பின் நோக்கிச் செல்வது போன்றிக்கொண்டு, சூரியனையும் சுற்றிக் கொண்டு வருவதால் அது பின் நோக்கிச் செல்வது போன்ற தோற்றம் ஏற்படவில்லை. ஆகவே இதற்கும் வக்கிரகதி என்பதே கிடையாது.
அயனாம்சம்:
நமது இந்திய ஜோதிடத்திற்குப் பெயர் "Nirayana" முறை. மேலை நாட்டவர் முறைக்குப் பெயர் "Sayana". இந்த இரண்டு முறைக்கும் வேறுபாடு உண்டு. நமது ஜோதிடத்தில் இராசி மண்டலத்தின் ஆரம்ப இடம் அஸ்வினி நட்சத்திரத்தின் ஆரம்ப இடம். அதாவது மேஷ ராசி ஆரம்பமாகும் இடம். இது 00 யில் ஆரம்பமாகிறது. அதேபோல 1800 யில், சித்திரை 2-ம் பாதத்தில், கன்னியில் முடிவடைகிறது. 3600 என்பது மீனத்தில் ரேவதி நட்சத்திரத்தில் 4-ம் பாதத்தில் முடிவடைகிறது. மேற்கூறிய நிலைகள் மாறாதவை. நிரந்தரமானவை.
ஆனால் மேல் நாட்டு முறை அப்படியில்லை. ராசி மண்டலத்தின் ஆரம்ப இடம் பின்னோக்கிச் செல்வதாக அவர்கள் கணிப்பு. அதாவது மேஷத்தின் ஆரம்ப இடம் பின்னோக்கிச் செல்வதாக அவர்கள் ஜோதிடம் கூறுகிறது. இந்த ஆரம்ப இடத்திற்குப் பெயர் Vernal Equinox என்பதாகும். இதன் தமிழ்ப் பெயர் நமக்குத் தெரியவில்லை. ஆகவே ஆங்கிலத்திலேயே எழுதி இருக்கிறோம். இந்த Vernal Equinox என்பது ஒன்றும் புரியாத புதிரல்ல. ஆகாயக் கோளத்தில் அதன் மத்திய ரேகையும், சூரியன் சுற்றிவரும் பாதையான Ecliptic - ம் சந்திக்கும் இடம்தான். இந்த இடம்தான் பின்னோக்கிச் செல்வதாக அவர்கள் கணிப்பு. இது மெதுவாக ஒரு வருஷத்துக்கு 50.33 செகண்டுகள் வீதம் பின்னோக்கிச் செல்கிறது. இந்த இரண்டு ஆரம்ப இடத்திற்குள்ள வித்தியாசம்தான் "அயனாம்சம்" என்பது. இந்த அயனாம்சத்தை Degrees, Minutes, Seconds - ல் கூறுவது வழக்கம்.
Sayana - விலிருந்து அயனாம்சத்தைக் கழித்தால் கிடைப்பது இந்திய ஜோதிடகணிதமான நிராயனா. கி.பி. 285 - ம் ஆண்டு நமது ஜோதிடப்படியும், மேலை நாட்டு ஜோதிடப்படியும், இந்த ஆரம்ப இடமான Vernal Equinox என்பது ஒன்றாக இருந்தது. அத்ற்குப்பின்தான் அது பின் நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. இந்த வேகத்தில் அதாவது வருஷாத்திற்கு 50.33 செகண்டுகள் வீதம் 360 டிகிரியையும் கடக்கப் பல ஆயிரக் கனக்கான ஆண்டுகள் ஆகும். கி.பி 26085 - ம் ஆண்டு மறுபடியும் இந்த அயனாம்சம் பூஜ்யமாக மாறும்.
இந்த அயனாம்சத்தைக் கணக்கிடுவதில் பலர் பல வழிகளைக் கூறியுள்ளனர். கல்கத்தாவிலுள்ள வானவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் திரு. N.C. லஹிரி கொடுத்துள்ள அயனாம்சத்தை அனேகமாக எல்லாரும் கையாண்டு வருகின்றனர். தற்கால ஜோதிட மேதைகளான திரு. K.S.கிருஷ்ண மூர்த்தி, திரு.B.V. ராமன், திரு.C.G. ராஜன் ஆகியோரும் அயன்னாம்சத்தைக் கணிதம் செய்துள்ளனர். இதில் திரு.B.V. ராமன் அயனாம்சம் தவிர மற்றவைகளெல்லாவற்றிலும் வித்தியாசம் குறைவாகவே இருக்கிறது. ஆனால் திரு. B.V. ராமன் அயனாம்சத்தில் வித்தியாசம் ஒரு டிகிரிக்கும் அதிகமாகவே இருக்கிறது. ஆனால் அதை உபயோகிப்பவரும் உள்ளனர்.
நாம் இத்துடன் நமது ஜோதிட பாடங்களை முடித்துக் கொள்கிறோம். இதைப் படித்த வாசக நண்பர்களுக்கு இவை உபயோகமாக இருந்திருக்குமென நினைக்கிறோம்.
வணக்கம்.
இதை நாம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இவற்றை எல்லாம் பாட ஆரம்பத்திலேயே எழுதி இருக்கலாமே! ஏன் கடைசியில் எழுதுகிறீர்கள்? என நீங்கள் கேட்க்கலாம். ஆரம்பத்தில் ஜோதிடத்தைப் பற்றி வாசகர்களுக்கு ஒன்றும் தெரியாது. அப்போது வானவியலைப் பற்றியெல்லாம் எழுதினால் இது மிகவும் கஷ்டமானதொன்றாக இருக்கும்போல் இருக்கிறதே என்ற தவறான எண்ணம் உண்டாகும். அதனால் அவர்கள் இதைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் தடைப்படும். ஆகவே பாட முடிவில் இதையெல்லாம் எழுதுகிறோம். சூரியனும், மற்ற கிரகங்களும், பூமியிலிருந்து பார்க்கும்போது. அதைச் சுற்றிவருவதுபோல் தோற்றமளிக்கிறது என்று எழுதினோமல்லவா ?
சூரியன், பூமியைச் சுற்றி வருகின்ற பாதை நீள் வட்ட வடிவமானது. இதைத்தான் நாம் ஆங்கிலத்தில் "Ecliptic" என எழுதி இருந்தோம். இந்தப் பாதைக்கு இருபுறமும் (வடக்காகவும், தெற்காகவும்) எட்டு பாகை அளவிற்குப் பாதை அமையுங்கள். அதாவது சூரிய பாதைக்கு வடக்கே எட்டு டிகிரி அளவிலும், தெற்கே எட்டு டிகிரி அளவிலும் நீள் வட்டப் பாதை அமையுங்கள். இதுதான் ராசிமண்டலம். இந்த ராசி மண்டலத்தில்தான் எல்லா கிரகங்களும் சுற்றி வருகின்றன. இந்த ராசி மண்டலம்தான் மேஷம் முதல் மீனம் வரை 12 சம பாகங்களாக, 12 வீடுகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. இதில்தான் எல்லா கிரகங்களும் வலம் வருகின்றன. இந்த ராசி மண்டலம் நீள்வட்ட வடிவில் இருக்கிறது அல்லவா. ஆக மொத்தம் 3600 இருக்கிறது. அப்படியானால் ஒவ்வொரு ராசியும் 300. பன்னிரண்டு ராசியும் 30 x 12 = 360 பாகைகள். இந்த ஆகாய மண்டலத்தில் பூமி மையத்தில் இருக்கிறது அல்லவா? ஆக பூமியும் மானசீகமாக 12 பகுதியாக அல்லது 12 ராசியாகப் பிரிந்து இருக்கிறது. இதைப் பக்கத்தில் உள்ள படத்தைப் பார்த்தால் நன்றாக விளங்கும். கணிதம் தெரிந்தவர்களுக்கு இந்த உண்மை மிக எளிதாகப் புரியும்.
நாம் ஜாதகம் போடக் கற்றுக் கொடுக்கும்போது பூமி 12 ராசியாகப் பிரிக்கப் பட்டு இருக்கிறது என்று பொதுப்படையாக எழுதி விட்டோம். எவ்வாறு பிரிக்கப்பட்டு இருக்கிறது என்று மேலே கூறியதுபோல் விரிவாக எழுதவில்லை. அப்போது வாசகர்கள் ஆரம்ப நிலயில் உள்ளவர்கள். இப்போது அப்படியல்ல; இவற்றையெல்லாம் புரிந்து கொள்ளூம் ஆற்றல் உள்ளவர்கள். ராசி மண்டலமென்றால் என்னவென்றும், பூமி எவ்வாறு 12 ராசிகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது என்றும் வாசகர்கள் நன்றாகப் புரிந்து கொண்டு இருப்பார்கள் என நினைக்கிறோம்.
வக்ர கதி:
இந்த ராசி மண்டலத்தில் கிரகங்கள் சமயங்களில் வக்கிரமாகிறது அல்லவா? அது எவ்வாறு ஆகிறது? வக்கிரம் என்றால் என்ன? எப்படி ஏற்படுகிறது? எனப் பார்ப்போம். "வக்கிரம்" என்றால் பின்னோக்கிச் செல்லுதல் எனப் பொருள். ஆனால் கிரகங்கள் எதுவும் பின்னேக்கிச் செல்வது கிடையாது. அதைப் போன்ற தோற்றம் ஏற்படுகிறது. அது எவ்வாறு ஏற்படுகிறது? எனப் பார்ப்போம். சூரியன், சந்திரன் இரண்டுக்கும் எப்போதுமே வக்கிரகதி என்பது கிடையாது. ராகு, கேதுக்கள் எப்போதுமே வக்கிரகதியிலேயே இருப்பவர்கள் என மேலே பார்த்தோம். அப்படியானால் மற்ற 5 கிரகங்களான புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி ஆகியவற்றிற்கு வக்கிர கதி உண்டா என்றால் நிச்சயம் உண்டு. இப்போது சூரிய மண்டலத்தைக் கண்முன்னே நிறுத்துங்கள். சூரியன் நடுவில் இருக்கிறார். அவரைமுதலில் சுற்றும் கிரகம் புதன். அவருடைய வட்டப் பாதை மிகச் சிறியதாக இருக்கும். இதற்கு அடுத்து சுற்றுபவர் சுக்கிரன். இவர் சுற்றும் பாதையையும் சிறியதுதான். ஆனால் புதனின் பாதையை விடப் பெரியது. அடுத்த சுற்றில் தான் நமது பூமி இருக்கிறது. இவர்கள் இரண்டு பேரின் வட்டப் பாதையைவிட பூமியின் வட்டப் பாதை பெரியது. புதனுக்கும், சுக்கிரனுக்கும் சுற்றும்பாதை சிறியதாக இருப்பதனால் அவைகள் "Inferior Planets" என்றழைக்கப் படுகின்றன. பூமிக்கு அடுத்து வரும் செவ்வாய், குரு, சனி ஆகியவகளின் சுற்றுப்பாதை பூமியின் பாதையைவிட மிகப் பெரியது. ஆகவே அவைகளை "Superior Planets" என்றழைக்கிறார்கள். நாம் முதலில் புதன் இப்படி வக்கிரகதியில் இருப்பதாகத் தோற்றம் அளிக்கிறது எனப் பார்ப்போம். புதன், சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் வரும்போது இவ்விதமாகத் தோற்றம் அளிக்கிறது. அடுத்த பக்கம் உள்ள படத்தைப் பாருங்கள்.
‘பு-1’ என்பது புதனின் நிலை. அந்த இடத்தில் இருக்கும்போது "A" என்ற இடத்தில்துலாத்தில் இருப்பதுபோல் காட்சியளிக்கிறார். ‘பு-2’ என்ற இடத்திற்கு வரும்போது விருச்சிகத்தில் "B" என்ற இடத்தில் இருக்கிறார். ‘பு-3’ என்ற இடத்திற்கு வரும்போது தனுசுவில் "C" என்ற இடத்தில் இருப்பதுபோல் தோற்றமளிக்கிறார். ‘பு-4’, ‘பு-5’ என்ற இடங்களில் இருக்கும்போது மகரத்தில் "D", "E" என்ற இடங்களில் இருப்பதுபோல் தோற்றமளிக்கிறார். "பு-6" என்ற இடத்திற்கு வரும்போதுதான் வக்கிரம் ஆரம்பமாகிறது. அப்போதும் மகரத்தில்தான் இருக்கிறார் "F" என்ற இடத்திலிருந்து. ஆனால் "F" என்ற இடம் மகரத்திலேயே "E" என்ற இடத்திலிருந்து பின்னால் இருக்கிற்து பாருங்கள். "பு-7" என்ற இடம் தனுசில் "G" என்ற இடத்தில் இருக்கிறது பருங்கள். இப்போது புதனானவர் மகரத்திலிருந்து, தனுசிற்கு வந்து விட்டாரா? பின்னோக்கி வந்து விட்டாரா? "பு-8" என்ற இடம் புதன் விருச்சிகத்திற்கு வந்து விட்டதைப்போல் தோற்றத்தைக் கொடுக்கிறது. ஆக புதனின் சிறிய சுற்றுப்பாதை புதன், பூமிக்கும், சூரியனுக்கும் நடுவில் வரும்போது பின்னோக்கி வருவதைப் போல் தோற்றத்தைக் கொடுக்கிறது.இப்போது வக்கிரகதி என்றால் என்னவென்று விளங்கிவிட்டதா? புதன் சூரியனை விட்டு ஒருராசிக்குமேல் தாண்டிப்போகமாட்டார். அதேபோல் ஒரு ராசிக்குமேல் பின்னால் செல்லவும் மாட்டார். சுக்கிரனின் வக்கிர கதியும் இவ்வாறே. சுக்கிரன், சூரியனை விட்டு 2 ராசிக்கு மேல் முன்னாலோ அல்லது பின்னாலோ போக மாட்டார்.
Superior Planets என்று சொல்லப் படுகிற செவ்வாய், குரு, சனி ஆகியவைகள் எப்படி வக்கிரகதியை அடைகின்றன தெரியுமா? இவைகளின் சுற்றும்பாதை பூமி சுற்றும் பாதையை விட மிகப் பெரியது அல்லவா? இந்த கிரகங்களுக்கும், சூரியனுக்கும் நடுவில் பூமி வரும் போது அக்கிரகங்கள், புதனைப்போல் வக்கிரமாக வருவதைப் போல் தோற்றத்தைக் கொடுக்கின்றன. புதனின் வக்கிரகதியை நன்றாகப் புரிந்து கொண்டீர்களேயானால், இந்த கிரகங்களின் வக்கிரகதியும் நன்றாகப் புரியும். ஒவ்வொரு கிரகமும் எவ்வளவு நாட்கள் வக்கிரகதியை அடைகின்றன என்பதைக் கீழே காணலாம். புதன் 24 நாட்கள் வக்கிரமாகவும், சுக்கிரன் 42 நாட்கள் வக்கிரமாகவும், செவ்வாய் 80 நாட்கள் வக்கிரமாகவும், குரு 120 நாட்கள் வக்கிரமாகவும், சனி 140 நாட்கள் வக்கிரமாகவும் இருப்பார்கள். சூரியனுக்கும் சந்திரனுக்கும் வக்கிரகதி கிடையாது என எழுதி இருந்தோம். ஏன் ? என்ற கேள்விக்கும் பதில் சொன்னால் இன்னும் விளக்கமாக இருக்குமல்லவா? சூரியன் நிலையாய் ஓரிடத்திலேயே இருப்பதனால் பூமி மட்டுமே சூரியனைச் சுற்றி வருகிறது.பூமியிலிருந்து எங்கிருந்து பார்த்தாலும் சூரியன் முன்னோக்கிச் செல்வது போலவே தோற்றம் அளிக்கிறது. ஆகவே சூரியனுக்கு வக்கிரகதி என்பதே கிடையாது. சந்திரன் பூமியின் பாதையிலேயே பூமியை¨யும் சுற்றிக்கொண்டு, சூரியனையும் சுற்றிக் கொண்டு வருவதால் அது பின் நோக்கிச் செல்வது போன்றிக்கொண்டு, சூரியனையும் சுற்றிக் கொண்டு வருவதால் அது பின் நோக்கிச் செல்வது போன்ற தோற்றம் ஏற்படவில்லை. ஆகவே இதற்கும் வக்கிரகதி என்பதே கிடையாது.
அயனாம்சம்:
நமது இந்திய ஜோதிடத்திற்குப் பெயர் "Nirayana" முறை. மேலை நாட்டவர் முறைக்குப் பெயர் "Sayana". இந்த இரண்டு முறைக்கும் வேறுபாடு உண்டு. நமது ஜோதிடத்தில் இராசி மண்டலத்தின் ஆரம்ப இடம் அஸ்வினி நட்சத்திரத்தின் ஆரம்ப இடம். அதாவது மேஷ ராசி ஆரம்பமாகும் இடம். இது 00 யில் ஆரம்பமாகிறது. அதேபோல 1800 யில், சித்திரை 2-ம் பாதத்தில், கன்னியில் முடிவடைகிறது. 3600 என்பது மீனத்தில் ரேவதி நட்சத்திரத்தில் 4-ம் பாதத்தில் முடிவடைகிறது. மேற்கூறிய நிலைகள் மாறாதவை. நிரந்தரமானவை.
ஆனால் மேல் நாட்டு முறை அப்படியில்லை. ராசி மண்டலத்தின் ஆரம்ப இடம் பின்னோக்கிச் செல்வதாக அவர்கள் கணிப்பு. அதாவது மேஷத்தின் ஆரம்ப இடம் பின்னோக்கிச் செல்வதாக அவர்கள் ஜோதிடம் கூறுகிறது. இந்த ஆரம்ப இடத்திற்குப் பெயர் Vernal Equinox என்பதாகும். இதன் தமிழ்ப் பெயர் நமக்குத் தெரியவில்லை. ஆகவே ஆங்கிலத்திலேயே எழுதி இருக்கிறோம். இந்த Vernal Equinox என்பது ஒன்றும் புரியாத புதிரல்ல. ஆகாயக் கோளத்தில் அதன் மத்திய ரேகையும், சூரியன் சுற்றிவரும் பாதையான Ecliptic - ம் சந்திக்கும் இடம்தான். இந்த இடம்தான் பின்னோக்கிச் செல்வதாக அவர்கள் கணிப்பு. இது மெதுவாக ஒரு வருஷத்துக்கு 50.33 செகண்டுகள் வீதம் பின்னோக்கிச் செல்கிறது. இந்த இரண்டு ஆரம்ப இடத்திற்குள்ள வித்தியாசம்தான் "அயனாம்சம்" என்பது. இந்த அயனாம்சத்தை Degrees, Minutes, Seconds - ல் கூறுவது வழக்கம்.
Sayana - விலிருந்து அயனாம்சத்தைக் கழித்தால் கிடைப்பது இந்திய ஜோதிடகணிதமான நிராயனா. கி.பி. 285 - ம் ஆண்டு நமது ஜோதிடப்படியும், மேலை நாட்டு ஜோதிடப்படியும், இந்த ஆரம்ப இடமான Vernal Equinox என்பது ஒன்றாக இருந்தது. அத்ற்குப்பின்தான் அது பின் நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. இந்த வேகத்தில் அதாவது வருஷாத்திற்கு 50.33 செகண்டுகள் வீதம் 360 டிகிரியையும் கடக்கப் பல ஆயிரக் கனக்கான ஆண்டுகள் ஆகும். கி.பி 26085 - ம் ஆண்டு மறுபடியும் இந்த அயனாம்சம் பூஜ்யமாக மாறும்.
இந்த அயனாம்சத்தைக் கணக்கிடுவதில் பலர் பல வழிகளைக் கூறியுள்ளனர். கல்கத்தாவிலுள்ள வானவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் திரு. N.C. லஹிரி கொடுத்துள்ள அயனாம்சத்தை அனேகமாக எல்லாரும் கையாண்டு வருகின்றனர். தற்கால ஜோதிட மேதைகளான திரு. K.S.கிருஷ்ண மூர்த்தி, திரு.B.V. ராமன், திரு.C.G. ராஜன் ஆகியோரும் அயன்னாம்சத்தைக் கணிதம் செய்துள்ளனர். இதில் திரு.B.V. ராமன் அயனாம்சம் தவிர மற்றவைகளெல்லாவற்றிலும் வித்தியாசம் குறைவாகவே இருக்கிறது. ஆனால் திரு. B.V. ராமன் அயனாம்சத்தில் வித்தியாசம் ஒரு டிகிரிக்கும் அதிகமாகவே இருக்கிறது. ஆனால் அதை உபயோகிப்பவரும் உள்ளனர்.
நாம் இத்துடன் நமது ஜோதிட பாடங்களை முடித்துக் கொள்கிறோம். இதைப் படித்த வாசக நண்பர்களுக்கு இவை உபயோகமாக இருந்திருக்குமென நினைக்கிறோம்.
வணக்கம்.
Subscribe to:
Comments (Atom)