Monday, 23 October 2017

ஜோதிடப் பாடம் – 53 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!

இராசி மண்டலம்:

இதை நாம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இவற்றை எல்லாம் பாட ஆரம்பத்திலேயே எழுதி இருக்கலாமே! ஏன் கடைசியில் எழுதுகிறீர்கள்? என நீங்கள் கேட்க்கலாம். ஆரம்பத்தில் ஜோதிடத்தைப் பற்றி வாசகர்களுக்கு ஒன்றும் தெரியாது. அப்போது வானவியலைப் பற்றியெல்லாம் எழுதினால் இது மிகவும் கஷ்டமானதொன்றாக இருக்கும்போல் இருக்கிறதே என்ற தவறான எண்ணம் உண்டாகும். அதனால் அவர்கள் இதைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் தடைப்படும். ஆகவே பாட முடிவில் இதையெல்லாம் எழுதுகிறோம். சூரியனும், மற்ற கிரகங்களும், பூமியிலிருந்து பார்க்கும்போது. அதைச் சுற்றிவருவதுபோல் தோற்றமளிக்கிறது என்று எழுதினோமல்லவா ?




சூரியன், பூமியைச் சுற்றி வருகின்ற பாதை நீள் வட்ட வடிவமானது. இதைத்தான் நாம் ஆங்கிலத்தில் "Ecliptic" என எழுதி இருந்தோம். இந்தப் பாதைக்கு இருபுறமும் (வடக்காகவும், தெற்காகவும்) எட்டு பாகை அளவிற்குப் பாதை அமையுங்கள். அதாவது சூரிய பாதைக்கு வடக்கே எட்டு டிகிரி அளவிலும், தெற்கே எட்டு டிகிரி அளவிலும் நீள் வட்டப் பாதை அமையுங்கள். இதுதான் ராசிமண்டலம். இந்த ராசி மண்டலத்தில்தான் எல்லா கிரகங்களும் சுற்றி வருகின்றன. இந்த ராசி மண்டலம்தான் மேஷம் முதல் மீனம் வரை 12 சம பாகங்களாக, 12 வீடுகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. இதில்தான் எல்லா கிரகங்களும் வலம் வருகின்றன. இந்த ராசி மண்டலம் நீள்வட்ட வடிவில் இருக்கிறது அல்லவா. ஆக மொத்தம் 3600 இருக்கிறது. அப்படியானால் ஒவ்வொரு ராசியும் 300. பன்னிரண்டு ராசியும் 30 x 12 = 360 பாகைகள். இந்த ஆகாய மண்டலத்தில் பூமி மையத்தில் இருக்கிறது அல்லவா? ஆக பூமியும் மானசீகமாக 12 பகுதியாக அல்லது 12 ராசியாகப் பிரிந்து இருக்கிறது. இதைப் பக்கத்தில் உள்ள படத்தைப் பார்த்தால் நன்றாக விளங்கும். கணிதம் தெரிந்தவர்களுக்கு இந்த உண்மை மிக எளிதாகப் புரியும்.




நாம் ஜாதகம் போடக் கற்றுக் கொடுக்கும்போது பூமி 12 ராசியாகப் பிரிக்கப் பட்டு இருக்கிறது என்று பொதுப்படையாக எழுதி விட்டோம். எவ்வாறு பிரிக்கப்பட்டு இருக்கிறது என்று மேலே கூறியதுபோல் விரிவாக எழுதவில்லை. அப்போது வாசகர்கள் ஆரம்ப நிலயில் உள்ளவர்கள். இப்போது அப்படியல்ல; இவற்றையெல்லாம் புரிந்து கொள்ளூம் ஆற்றல் உள்ளவர்கள். ராசி மண்டலமென்றால் என்னவென்றும், பூமி எவ்வாறு 12 ராசிகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது என்றும் வாசகர்கள் நன்றாகப் புரிந்து கொண்டு இருப்பார்கள் என நினைக்கிறோம்.


வக்ர கதி:

இந்த ராசி மண்டலத்தில் கிரகங்கள் சமயங்களில் வக்கிரமாகிறது அல்லவா? அது எவ்வாறு ஆகிறது? வக்கிரம் என்றால் என்ன? எப்படி ஏற்படுகிறது? எனப் பார்ப்போம். "வக்கிரம்" என்றால் பின்னோக்கிச் செல்லுதல் எனப் பொருள். ஆனால் கிரகங்கள் எதுவும் பின்னேக்கிச் செல்வது கிடையாது. அதைப் போன்ற தோற்றம் ஏற்படுகிறது. அது எவ்வாறு ஏற்படுகிறது? எனப் பார்ப்போம். சூரியன், சந்திரன் இரண்டுக்கும் எப்போதுமே வக்கிரகதி என்பது கிடையாது. ராகு, கேதுக்கள் எப்போதுமே வக்கிரகதியிலேயே இருப்பவர்கள் என மேலே பார்த்தோம். அப்படியானால் மற்ற 5 கிரகங்களான புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி ஆகியவற்றிற்கு வக்கிர கதி உண்டா என்றால் நிச்சயம் உண்டு. இப்போது சூரிய மண்டலத்தைக் கண்முன்னே நிறுத்துங்கள். சூரியன் நடுவில் இருக்கிறார். அவரைமுதலில் சுற்றும் கிரகம் புதன். அவருடைய வட்டப் பாதை மிகச் சிறியதாக இருக்கும். இதற்கு அடுத்து சுற்றுபவர் சுக்கிரன். இவர் சுற்றும் பாதையையும் சிறியதுதான். ஆனால் புதனின் பாதையை விடப் பெரியது. அடுத்த சுற்றில் தான் நமது பூமி இருக்கிறது. இவர்கள் இரண்டு பேரின் வட்டப் பாதையைவிட பூமியின் வட்டப் பாதை பெரியது. புதனுக்கும், சுக்கிரனுக்கும் சுற்றும்பாதை சிறியதாக இருப்பதனால் அவைகள் "Inferior Planets" என்றழைக்கப் படுகின்றன. பூமிக்கு அடுத்து வரும் செவ்வாய், குரு, சனி ஆகியவகளின் சுற்றுப்பாதை பூமியின் பாதையைவிட மிகப் பெரியது. ஆகவே அவைகளை "Superior Planets" என்றழைக்கிறார்கள். நாம் முதலில் புதன் இப்படி வக்கிரகதியில் இருப்பதாகத் தோற்றம் அளிக்கிறது எனப் பார்ப்போம். புதன், சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் வரும்போது இவ்விதமாகத் தோற்றம் அளிக்கிறது. அடுத்த பக்கம் உள்ள படத்தைப் பாருங்கள்.




‘பு-1’ என்பது புதனின் நிலை. அந்த இடத்தில் இருக்கும்போது "A" என்ற இடத்தில்துலாத்தில் இருப்பதுபோல் காட்சியளிக்கிறார். ‘பு-2’ என்ற இடத்திற்கு வரும்போது விருச்சிகத்தில் "B" என்ற இடத்தில் இருக்கிறார். ‘பு-3’ என்ற இடத்திற்கு வரும்போது தனுசுவில் "C" என்ற இடத்தில் இருப்பதுபோல் தோற்றமளிக்கிறார். ‘பு-4’, ‘பு-5’ என்ற இடங்களில் இருக்கும்போது மகரத்தில் "D", "E" என்ற இடங்களில் இருப்பதுபோல் தோற்றமளிக்கிறார். "பு-6" என்ற இடத்திற்கு வரும்போதுதான் வக்கிரம் ஆரம்பமாகிறது. அப்போதும் மகரத்தில்தான் இருக்கிறார் "F" என்ற இடத்திலிருந்து. ஆனால் "F" என்ற இடம் மகரத்திலேயே "E" என்ற இடத்திலிருந்து பின்னால் இருக்கிற்து பாருங்கள். "பு-7" என்ற இடம் தனுசில் "G" என்ற இடத்தில் இருக்கிறது பருங்கள். இப்போது புதனானவர் மகரத்திலிருந்து, தனுசிற்கு வந்து விட்டாரா? பின்னோக்கி வந்து விட்டாரா? "பு-8" என்ற இடம் புதன் விருச்சிகத்திற்கு வந்து விட்டதைப்போல் தோற்றத்தைக் கொடுக்கிறது. ஆக புதனின் சிறிய சுற்றுப்பாதை புதன், பூமிக்கும், சூரியனுக்கும் நடுவில் வரும்போது பின்னோக்கி வருவதைப் போல் தோற்றத்தைக் கொடுக்கிறது.இப்போது வக்கிரகதி என்றால் என்னவென்று விளங்கிவிட்டதா? புதன் சூரியனை விட்டு ஒருராசிக்குமேல் தாண்டிப்போகமாட்டார். அதேபோல் ஒரு ராசிக்குமேல் பின்னால் செல்லவும் மாட்டார். சுக்கிரனின் வக்கிர கதியும் இவ்வாறே. சுக்கிரன், சூரியனை விட்டு 2 ராசிக்கு மேல் முன்னாலோ அல்லது பின்னாலோ போக மாட்டார்.

Superior Planets என்று சொல்லப் படுகிற செவ்வாய், குரு, சனி ஆகியவைகள் எப்படி வக்கிரகதியை அடைகின்றன தெரியுமா? இவைகளின் சுற்றும்பாதை பூமி சுற்றும் பாதையை விட மிகப் பெரியது அல்லவா? இந்த கிரகங்களுக்கும், சூரியனுக்கும் நடுவில் பூமி வரும் போது அக்கிரகங்கள், புதனைப்போல் வக்கிரமாக வருவதைப் போல் தோற்றத்தைக் கொடுக்கின்றன. புதனின் வக்கிரகதியை நன்றாகப் புரிந்து கொண்டீர்களேயானால், இந்த கிரகங்களின் வக்கிரகதியும் நன்றாகப் புரியும். ஒவ்வொரு கிரகமும் எவ்வளவு நாட்கள் வக்கிரகதியை அடைகின்றன என்பதைக் கீழே காணலாம். புதன் 24 நாட்கள் வக்கிரமாகவும், சுக்கிரன் 42 நாட்கள் வக்கிரமாகவும், செவ்வாய் 80 நாட்கள் வக்கிரமாகவும், குரு 120 நாட்கள் வக்கிரமாகவும், சனி 140 நாட்கள் வக்கிரமாகவும் இருப்பார்கள். சூரியனுக்கும் சந்திரனுக்கும் வக்கிரகதி கிடையாது என எழுதி இருந்தோம். ஏன் ? என்ற கேள்விக்கும் பதில் சொன்னால் இன்னும் விளக்கமாக இருக்குமல்லவா? சூரியன் நிலையாய் ஓரிடத்திலேயே இருப்பதனால் பூமி மட்டுமே சூரியனைச் சுற்றி வருகிறது.பூமியிலிருந்து எங்கிருந்து பார்த்தாலும் சூரியன் முன்னோக்கிச் செல்வது போலவே தோற்றம் அளிக்கிறது. ஆகவே சூரியனுக்கு வக்கிரகதி என்பதே கிடையாது. சந்திரன் பூமியின் பாதையிலேயே பூமியை¨யும் சுற்றிக்கொண்டு, சூரியனையும் சுற்றிக் கொண்டு வருவதால் அது பின் நோக்கிச் செல்வது போன்றிக்கொண்டு, சூரியனையும் சுற்றிக் கொண்டு வருவதால் அது பின் நோக்கிச் செல்வது போன்ற தோற்றம் ஏற்படவில்லை. ஆகவே இதற்கும் வக்கிரகதி என்பதே கிடையாது.

அயனாம்சம்:

நமது இந்திய ஜோதிடத்திற்குப் பெயர் "Nirayana" முறை. மேலை நாட்டவர் முறைக்குப் பெயர் "Sayana". இந்த இரண்டு முறைக்கும் வேறுபாடு உண்டு. நமது ஜோதிடத்தில் இராசி மண்டலத்தின் ஆரம்ப இடம் அஸ்வினி நட்சத்திரத்தின் ஆரம்ப இடம். அதாவது மேஷ ராசி ஆரம்பமாகும் இடம். இது 00 யில் ஆரம்பமாகிறது. அதேபோல 1800 யில், சித்திரை 2-ம் பாதத்தில், கன்னியில் முடிவடைகிறது. 3600 என்பது மீனத்தில் ரேவதி நட்சத்திரத்தில் 4-ம் பாதத்தில் முடிவடைகிறது. மேற்கூறிய நிலைகள் மாறாதவை. நிரந்தரமானவை.

ஆனால் மேல் நாட்டு முறை அப்படியில்லை. ராசி மண்டலத்தின் ஆரம்ப இடம் பின்னோக்கிச் செல்வதாக அவர்கள் கணிப்பு. அதாவது மேஷத்தின் ஆரம்ப இடம் பின்னோக்கிச் செல்வதாக அவர்கள் ஜோதிடம் கூறுகிறது. இந்த ஆரம்ப இடத்திற்குப் பெயர் Vernal Equinox என்பதாகும். இதன் தமிழ்ப் பெயர் நமக்குத் தெரியவில்லை. ஆகவே ஆங்கிலத்திலேயே எழுதி இருக்கிறோம். இந்த Vernal Equinox என்பது ஒன்றும் புரியாத புதிரல்ல. ஆகாயக் கோளத்தில் அதன் மத்திய ரேகையும், சூரியன் சுற்றிவரும் பாதையான Ecliptic - ம் சந்திக்கும் இடம்தான். இந்த இடம்தான் பின்னோக்கிச் செல்வதாக அவர்கள் கணிப்பு. இது மெதுவாக ஒரு வருஷத்துக்கு 50.33 செகண்டுகள் வீதம் பின்னோக்கிச் செல்கிறது. இந்த இரண்டு ஆரம்ப இடத்திற்குள்ள வித்தியாசம்தான் "அயனாம்சம்" என்பது. இந்த அயனாம்சத்தை Degrees, Minutes, Seconds - ல் கூறுவது வழக்கம்.

Sayana - விலிருந்து அயனாம்சத்தைக் கழித்தால் கிடைப்பது இந்திய ஜோதிடகணிதமான நிராயனா. கி.பி. 285 - ம் ஆண்டு நமது ஜோதிடப்படியும், மேலை நாட்டு ஜோதிடப்படியும், இந்த ஆரம்ப இடமான Vernal Equinox என்பது ஒன்றாக இருந்தது. அத்ற்குப்பின்தான் அது பின் நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. இந்த வேகத்தில் அதாவது வருஷாத்திற்கு 50.33 செகண்டுகள் வீதம் 360 டிகிரியையும் கடக்கப் பல ஆயிரக் கனக்கான ஆண்டுகள் ஆகும். கி.பி 26085 - ம் ஆண்டு மறுபடியும் இந்த அயனாம்சம் பூஜ்யமாக மாறும்.

இந்த அயனாம்சத்தைக் கணக்கிடுவதில் பலர் பல வழிகளைக் கூறியுள்ளனர். கல்கத்தாவிலுள்ள வானவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் திரு. N.C. லஹிரி கொடுத்துள்ள அயனாம்சத்தை அனேகமாக எல்லாரும் கையாண்டு வருகின்றனர். தற்கால ஜோதிட மேதைகளான திரு. K.S.கிருஷ்ண மூர்த்தி, திரு.B.V. ராமன், திரு.C.G. ராஜன் ஆகியோரும் அயன்னாம்சத்தைக் கணிதம் செய்துள்ளனர். இதில் திரு.B.V. ராமன் அயனாம்சம் தவிர மற்றவைகளெல்லாவற்றிலும் வித்தியாசம் குறைவாகவே இருக்கிறது. ஆனால் திரு. B.V. ராமன் அயனாம்சத்தில் வித்தியாசம் ஒரு டிகிரிக்கும் அதிகமாகவே இருக்கிறது. ஆனால் அதை உபயோகிப்பவரும் உள்ளனர்.

நாம் இத்துடன் நமது ஜோதிட பாடங்களை முடித்துக் கொள்கிறோம். இதைப் படித்த வாசக நண்பர்களுக்கு இவை உபயோகமாக இருந்திருக்குமென நினைக்கிறோம்.


வணக்கம்.

No comments:

Post a Comment